Wednesday, August 11, 2010

போன மச்சான்!

சில பதிவுகளுக்கு முன்னால் நண்பன் (மச்சான்) ஒருவன் டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொண்டதைப் பற்றி சொல்வதாக சொல்லி இருந்தேன். பார்ட்டி முடிந்து நாங்கள் ஆறு பேரும் வீடு திரும்ப, மச்சானும் சக நண்பரும் ஒரு வண்டியில் அடையார் ஓவர் ப்ரிட்ஜை தாண்டி, பெசன்ட் நகர் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் வண்டிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.


இவர்கள் வருவதை பார்த்ததும் கான்ஸ்டபிள் ஒருவர் நிப்பாட்டச் சொல்லி கை காட்ட, மச்சானும் அவ்வாறே செய்தான். அவன் வண்டியில் எப்போதுமே ஹெட்லைட் எரிந்ததில்லை. 'ஏன் எரியல ?' என்று அவர் கேட்க மப்பில் இருந்த இவன் உளற ஆரம்பித்துவிட்டான். வாடை பலமாக வீச, 'குடிச்சிறிக்கியா ?' என்று கேட்டதும், 'இல்ல சார்' என்று இவன் மறுத்தான். அவர் பல முறை கேட்டும் இவன் மழுப்ப, பக்கத்தில் இருந்த நண்பன், 'மச்சான்! பேசாம ஒத்துக்கிட்டு அவர்கிட்ட கொஞ்சம் காச குடுத்து கரெக்ட் பண்ணுடா' என்று சொன்னான். அதை பொருட்படுத்தாமல், இவன் மேலும் மல்லுகட்ட, அவர் இவனின் பைக்கில் ஏறிக்கொண்டு அவனையும் பின் சீட்டில் ஏறி உட்காரச் சொன்னார். காதலி காதலன் பைக்கில் அமர்வது போல் இவனும் அமர்ந்து கொள்ள, வண்டியைக் கிளப்பிக்கொண்டு இருவரும் சென்று விட்டனர். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த மாட்டு வண்டியில் படுத்து காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்தும், மச்சான் வராமல் இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

'என்னடா ஆச்சி ? ஏன் இவ்வளவு நேரம்?' என்று நாங்கள் கேட்டதும் 'அவன் என்ன நடுரோட்ல விட்டுட்டு ஏதோ தியாகி மாதிரி போயிருக்காண்டா' என்று எரிச்சலோட நடந்த விஷயத்தை சொன்னான். சொன்னதை கேட்டதும் நாங்கள் எல்லோரும் குலுங்க குலுங்க சிரிச்சோம் (இப்படி சீரியஸ் ஆன நேரத்தில் சிரிப்பதெல்லாம் எங்களுக்கு வழக்கமாகிப் போயிருந்தது. துக்கம் அனுசரிக்க கூட்டமாக சென்று, அங்கு போய் சிரித்த அனுபவமும் உண்டு) . அந்த நேரம் சிரிச்சாலும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கவலையும் இருந்தது.

மச்சான் வீடு திரும்பிய கதையை இன்னொரு பதிவில் போடுகிறேன்!

2 comments:

சாணக்கியன் said...

இவரு பெரிய ராஜேஷ் குமாரு... தொடரும் போடராரு... :D

Magesh said...

சாணக்யா..பதிவு ரொம்ப பெருசா போனா, பொதுவா பல பேர் படிக்க அலுப்புபட்டு விட்டுடவாங்கன்னு நினைச்சு ரெண்டு பதிவா போட்டேன்.