Friday, August 13, 2010

போன மச்சான் திரும்பி வந்தான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி..

மச்சானை கூட்டிச் சென்ற கான்ஸ்டபில் நேராக பெசன்ட் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு இது மாதிரி மாட்டிக்கொண்ட கும்பலோட இவனையும் உட்கார வைத்து இன்னும் சிலர் கொண்டு வரப்படும் வரை காத்திருக்கச் செய்தனர். மணி இரவு ஒன்றரை ஆக மச்சான் எவ்ளோ சொல்லியும் அவர்கள் விடுவதாயில்லை. உருப்படியான கும்பல் சேர்ந்த பின் ஒரு ஜீப்பில் இவர்களை ஏற்றிக்கொண்டு சைதாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு சென்ற வார்டில் ஒரு துர்நாற்றம் நிலவிக்கொண்டே இருக்க, மருத்துவர் ஒருவர் வந்து இவர்களை குடிபோதை சோதனைக்கு உட்படுத்தினார் (என்ன செய்தார் என்று மச்சான் எங்களிடம் கூறியது நினைவில்லை). கடைசியாக இவர்கள் குடிபோதையில் இருந்ததிற்கான சான்றிதழ் ஒன்றை கொடுத்து மறுபடியும் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். காலையில் இவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்த பிளான் பண்ணி இருந்தனர்.

மணி மூணு ஆகி இருந்தது. காவல் நிலையத்திலேயே உட்காந்திருந்த மச்சான், ஐந்து மணி ஆனதும் இன்ஸ்பெக்டர் ஷிப்டு மாறியதை கவனித்தான். புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் சென்று தான் ஒரு கணினி பொறியாளர் என்றும் ஒரு மதிக்கத்தக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி தான் கொண்டு வந்திருந்த ஐடி கார்டைக் காட்டி நடந்ததை விவரித்துள்ளான்.  'என்ன தம்பி இவ்ளோ படிச்சிருக்கீங்க..இப்படி பண்ணலாமா ? இனிமே இப்படி பண்ணாதீங்க. ஒரு ஆயிரம் ரூபாவ பைனா கட்டிட்டு கெளம்புங்க' என்று அவர் சொல்ல, 'சரி சார். ஆனா என் கிட்ட காசு இல்ல. பக்கத்துல இருக்க ATMல எடுத்து வரேன் சார்' என்று சொன்னான். 'இருங்க தம்பி, கான்ஸ்டபில் ஒருத்தர உங்க கூட அனுப்பி வைக்கறேன்' என்று சொல்லி, இவனை ATM அனுப்பி வைத்தனர். காசை எடுத்து அவரிடம் கொடுத்த பின் அவனை ஒரு வழியாக வீடு அனுப்பி வைத்தனர். அப்போது மணி ஆறாக, மாமனார் வீட்டில் மச்சானின் முதல் இரவு முடிவுக்கு வந்தது.

Wednesday, August 11, 2010

போன மச்சான்!

சில பதிவுகளுக்கு முன்னால் நண்பன் (மச்சான்) ஒருவன் டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொண்டதைப் பற்றி சொல்வதாக சொல்லி இருந்தேன். பார்ட்டி முடிந்து நாங்கள் ஆறு பேரும் வீடு திரும்ப, மச்சானும் சக நண்பரும் ஒரு வண்டியில் அடையார் ஓவர் ப்ரிட்ஜை தாண்டி, பெசன்ட் நகர் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் வண்டிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.


இவர்கள் வருவதை பார்த்ததும் கான்ஸ்டபிள் ஒருவர் நிப்பாட்டச் சொல்லி கை காட்ட, மச்சானும் அவ்வாறே செய்தான். அவன் வண்டியில் எப்போதுமே ஹெட்லைட் எரிந்ததில்லை. 'ஏன் எரியல ?' என்று அவர் கேட்க மப்பில் இருந்த இவன் உளற ஆரம்பித்துவிட்டான். வாடை பலமாக வீச, 'குடிச்சிறிக்கியா ?' என்று கேட்டதும், 'இல்ல சார்' என்று இவன் மறுத்தான். அவர் பல முறை கேட்டும் இவன் மழுப்ப, பக்கத்தில் இருந்த நண்பன், 'மச்சான்! பேசாம ஒத்துக்கிட்டு அவர்கிட்ட கொஞ்சம் காச குடுத்து கரெக்ட் பண்ணுடா' என்று சொன்னான். அதை பொருட்படுத்தாமல், இவன் மேலும் மல்லுகட்ட, அவர் இவனின் பைக்கில் ஏறிக்கொண்டு அவனையும் பின் சீட்டில் ஏறி உட்காரச் சொன்னார். காதலி காதலன் பைக்கில் அமர்வது போல் இவனும் அமர்ந்து கொள்ள, வண்டியைக் கிளப்பிக்கொண்டு இருவரும் சென்று விட்டனர். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த மாட்டு வண்டியில் படுத்து காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்தும், மச்சான் வராமல் இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

'என்னடா ஆச்சி ? ஏன் இவ்வளவு நேரம்?' என்று நாங்கள் கேட்டதும் 'அவன் என்ன நடுரோட்ல விட்டுட்டு ஏதோ தியாகி மாதிரி போயிருக்காண்டா' என்று எரிச்சலோட நடந்த விஷயத்தை சொன்னான். சொன்னதை கேட்டதும் நாங்கள் எல்லோரும் குலுங்க குலுங்க சிரிச்சோம் (இப்படி சீரியஸ் ஆன நேரத்தில் சிரிப்பதெல்லாம் எங்களுக்கு வழக்கமாகிப் போயிருந்தது. துக்கம் அனுசரிக்க கூட்டமாக சென்று, அங்கு போய் சிரித்த அனுபவமும் உண்டு) . அந்த நேரம் சிரிச்சாலும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கவலையும் இருந்தது.

மச்சான் வீடு திரும்பிய கதையை இன்னொரு பதிவில் போடுகிறேன்!

Friday, August 6, 2010

சுருக்கல் - 'பிடிவாதம்'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

பிடிவாதம்

கரை நீ
அலை நான்!
நுரை தள்ளி போகிறேன்!

சுருக்கல் - 'பற்போர்'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

பற்போர்

வெள்ளை சட்டை! ஆயுள் சிறை!
பற்கள் போர் தொடுக்க
லெக் பீஸ் உள்ளே சென்றுகொண்டிருந்தது.

Friday, July 30, 2010

சுருக்கல் - 'சோப்பு கட்டி'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

சோப்பு கட்டி

ஒட்டி உறவாடும்
அந்தரங்க தோழனே!
உன்னை உருத்தெரியாமல் சிதைக்கும்
யாம்தாம் உமக்கு எமனே!

ஒரு ரீ-என்ட்ரி


பதிவு செஞ்சு ரெண்டு வருஷம் மேல் ஆச்சு! இப்போ கொஞ்சம் சம்மர் லீவு; அதான் மறுபடியும் ஒரு ரீ-என்ட்ரி...
நான் சென்னையில் 2002 இருந்து 2004 வர இருந்தேன். மந்தவெளியில ஒரு வருஷம் இருந்தேன். பின்னால ஆபீஸ் மாறினதால திருவான்மியூர் பக்கம் போயிட்டேன். மறுபடியும் சென்னையில 2006ல மூணு மாசம் பழைய திருவான்மியூர் வீட்டுக்கு வந்து இருந்தேன். அதுக்கப்புறம் 2008ல கல்யாணம் ஆகி குரோம்பேட்டைல ஒரு வருஷம் இருந்தேன்..இத்தன காலத்துல நண்பர்கள் டிராபிக் போலீசுல மாட்னாலும் நான் மட்டும் சிக்காம இருந்தேன். இத்தனைக்கும் என் வண்டி பாண்டிச்சேரி நம்பர் பிளேட். அப்பப்போ வெள்ளை சட்டை காக்கி தொப்பி பார்த்து உள்ளுக்குள்ள அல்லு விட்டாலும், அந்த பக்கம் தலைய திருப்பாம பந்தாவா தப்பிச்சிடுவேன். ஒரு தடவ நண்பர்களோடு ஒரு பார்டி முடிஞ்ச கையோட வீடு திரும்பும் போது, நான் எவ்ளோ சொல்லியும் கேக்காமல் ஆட்டோல போகாம மூணு பைக்ல ஆறு பேரா போனோம். நான் போன வண்டிய ஓட்டுன நண்பன் மப்புல இருந்தாலும் உஷாரா போலீஸ் செக் பண்ணாத வழியா வீடு வந்து சேர்ந்தான். எல்லா நண்பர்கள் குருப்ளையும் ஒரு குழப்பவாதி ஒருத்தன் இருப்பான். எங்க செட்ல இருந்த அவன் மட்டும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம, போலீசு இருக்குற பக்கமா போய் சிக்கிட்டான். அதுக்கப்புறம் நடந்த கூத்த இன்னொரு பதிவுல போடறேன்.

கமிங் பேக் டு தி பாயிண்ட், சென்னையில் இருந்து கனடா கிளம்புவதால, வண்டிய கொண்டு போய் ஒரு சர்வீஸ் முடிச்சு திரும்பிட்டு இருந்தேன் (வண்டிய விக்குருதா ஒரு ப்ளான்). வெற்றி தியீடேருக்கு முன்னால சிக்னல் இல்லாத காரணத்துனால அங்க ஒரு ட்ராபிக் பீசி இருப்பாரு. கடந்த ரெண்டு வாரமா ஒரு கத்துக்குட்டி பீசீக்கு அங்க டூட்டி. அந்த பீசி நான் வந்த சைடுக்கு கிரீன் சிக்னல் போட, நான் கியர் போட்டு ஆக்சிலேடர திருப்பினதும் வண்டி நின்னு போச்சு. நியுற்றள்ள வண்டிய போட்டு உதைக்கிறேன் உதைக்கிறேன், வண்டி ஸ்டார்ட் ஆகல. அதுக்குள்ள பின்ன இருந்த வண்டியேல்லாம் ஹாரன் அடிச்சுகுட்டே என்ன முந்தி செல்ல, கடுப்பான பீசி என் பக்கமா நடைய கட்டினார். நான் இன்னும் வேகமா உதைக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள வண்டி பக்கத்துல வந்த அவர், 'வண்டிய ஓரம் கட்டி ஸ்டார்ட் பண்ணுயா' அப்டீனார். 'சாரி சார்!' அப்டீன்னு நான் அசடு வழிஞ்சதும் என் நம்பர் பிளேட்டை பார்த்த அவர், சடார் என என் வண்டி சாவியை பிடுங்கினார். NOC இருக்கா அப்டீன்னு கேக்க, 'போயும் போயும் கடைசி நாள் அதுவுமா சிக்குனோம், அதுவும் ஒரு கத்துக்குட்டி கிட்ட போயி..' அப்டீன்னு நெனைசுக்குட்டே 'இல்ல சார்' அப்டீன்னு சொன்னேன். 'ஒரு நூறு ரூபா எடு இல்ல பைன் கட்டு' அப்டீனாறு. அவரு கிட்ட ஒரு பைன் புக்கு கூட இல்ல. பர்ஸ தொழாவி 'அம்பது ரூபா தான் சார் இருக்கு..ஒரு இன்டர்வுயுக்கு போயுகிட்டு இருக்கேன் சார். அவசரம்' அப்டீன்னு புருடா விட்டேன். வந்த வரைக்கும் லாபம் அப்டீன்னு அவரும் அதை வாங்கி கொள்ள, பைக்க ஓரம் கட்டி எரிச்சலோட உதைச்சேன். ஒரே உதைல அதுவும் ஸ்டார்ட் ஆச்சு.