Thursday, January 31, 2008

'அட' போட வைக்கும் தீர்மானம்!


பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இறங்கியவுடன் நம்ம ஊரு மாதிரி வருமா என்று பலர் எச்சில் வரா விட்டாலும், ரோட்டில் எச்சில் வரும் வரை காரி துப்புவர் என்று. நம்ம ஊருடா என்று இனி யாரும் அவ்வளவு எளிதாக நினைத்து சென்னையின் பொது இடங்களில் எச்சில் துப்பவோ, குப்பை போடவோ முடியாது. எச்சில் துப்பினால் ரூ 50 ம் , குப்பை கொட்டினால் ரூ 100 ம் அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் சட்டம் போல் அல்லாமல் நிரந்தரமாக இச்சட்டம் வந்தால் பெயரளவில் இருக்கும் சிங்காரச் சென்னை நிசமாகவே சிங்காரமாக வாய்ப்பு உள்ளது. யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, போலீசாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விஷயம் இது.

Tuesday, January 29, 2008

சுருக்கல் - 'ரயில்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

ரயில்..

கைகோர்த்து செல்லும் தண்டவாளங்கள்!
எரிச்சலில் புகைந்து செல்லும்
ஒண்டிக்கட்டை ரயில் வண்டி!

Monday, January 28, 2008

சுருக்கல் - 'குருதி'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

குருதி..

என் நாடி நரம்புகளில் இருக்கும் குருதியே..
என்ன ஒரு மயக்கும் அழகு உனக்கு!
உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மயங்குகிறேன்!

Saturday, January 26, 2008

சுருக்கல் - மண் வாசனை


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

மண் வாசனை..

பெண்ணே!
நீ அழகிய மழை மேகம்!
மண்ணாக இருந்து அன்னார்ந்து பார்க்கிறேன்!
மழையாக வந்து வாசம் சேர்ப்பாயா ?

சுருக்கல் - பொல்லாதவன்: பார்ட் 2!


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

பொல்லாதவன்: பார்ட் 2!

பொல்லாதவன் படம் பார்த்தது பாம்புக்கூட்டம்!
படம் முடிந்ததும் கட்டுவிரியன் சட்டையை கழற்ற..
நாகம் படம் எடுத்தது!

சுருக்கல் - 'ஹைக்கூ'


நண்பன் சாய் மகேஷுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். என்னை ஹைக்கூ கவிதைகள் எழுதச் சொன்னான். நான் இது வரை ஹைக்கூ படித்தது இல்லை. ஆகையால் ஒன்றை பரிமாறச் சொன்னேன். ந.முத்துகுமாரின் ஹைக்கூ ஒன்றை எடுத்து விட்டான் அவன்.

நள்ளிரவில் அண்ணா சாலை!
நியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை..
பஞ்சரான வண்டியுடன் நான்!

இதை படித்த உடன் எனக்கு ஒரு எதிர்மறை ஹைக்கூ (என் பாணியில் சுருக்கல்) ஒன்று தோன்ற, அதை அவனிடம் சொன்னேன். மிகவும் ரசித்தான். அந்தச் சுருக்கல் கீழே!

அதே நள்ளிரவில் அண்ணா சாலை!
தனியாக பிளாட்பார்மில் படுத்து இருந்தவனுக்கு
அன்று மட்டும் காவல் காக்க ஆள் கிடைத்தது..
பஞ்சரான வண்டியுடன் ஒரு ஏமாளி!

Thursday, January 24, 2008

சுருக்கல் - 'குமிழி'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

குமிழி..

அழகே! காற்றில் மிதக்கும் குமிழி நான்!
ஆசையாய் தொடு! நீ தொட்ட கனம் உயிர் போகவே வாழ்கிறேன்!

சண்டை போடுங்கள்


உங்கள் கணவனோ மனைவியோ உங்களை தாக்கிப் பேசும் போது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் ஆயுள் காலம் கம்மி என்று சொல்கிறது வாஷிங்டன்னிலிருந்து வரும் ஒரு மனோதத்துவ ஆய்வுக் குறிப்பு. ஆகையால், இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை எழும் என்று பழைய பஞ்சாங்கம் பாடாமல், எதிர் பேச்சு பேசி சண்டை போடுங்கள்.

ஆனால் சண்டைக்கு பின்னர் சமாதானம் ஆகுங்குள். எப்படி சமாதானம் ஆவது என்று தோன்றுகிறதா ? சிறு வயதில் உங்கள் தாய் அல்லது தந்தையிடம் அடி/ திட்டு வாங்கிய பின், அவர்கள் உங்களிடம் ஆசையாக பேசி செல்லம் காட்டியது ஞாபகம் இருக்கிறதா ? அதே வழியை பின்பற்றுங்கள்.

Tuesday, January 22, 2008

சுருக்கல் - 'கடுகளவு ஆசை'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கடுகளவு ஆசை..

என்னவளே!
எண்ணெய் சட்டியில் கொதிக்கும் கடுகிற்கும்
உன்னைத் தொட்டு முத்தமிட ஆசை!
அன்று முதல் நானே சமைத்தேன்!

சுருக்கல் - 'அரசு பேருந்தின் போலீஸ் கம்ப்ளைன்ட்..'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

அரசு பேருந்தின் போலீஸ் கம்ப்ளைன்ட்..

நிற்கும் போது சீண்டாமல்
கிளம்பும் போது துரத்தி சீண்டுகின்றனர்
இடுப்பில் தொங்கிக்கொண்டு
சில்மிஷம் செய்யும் பயணிகள்!

சரண்யா பாக்யராஜ்..


பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா பாக்யராஜ், தற்கொலைக்கு முயன்றதாக தகவல். காதல் தோல்வி என்றும் பரவலாக செய்தி.

ஒரு துணிச்சலான முடிவை எடுக்க சிரஞ்சீவியின் மகளை பார்த்தாவது இவர் கற்றுக்கொண்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் அவப்பெயரும் துயரமும் தாய் தந்தையருக்குத் தான்!

Sunday, January 20, 2008

சுருக்கல் - 'வெற்றிப்படிக்கட்டுகள்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

வெற்றிப்படிக்கட்டுகள்..

முயற்சியின் மேல் கொள்ளும் நம்பிக்கை!
தோல்வியின் போது கொள்ளும் மறுமலர்ச்சி!
கேளிப்பேச்சினை கேளா செவிட்டு உணர்ச்சி!
நான் நானாக இருக்க விரும்பாமல்
என்னை விட சிறப்பானவனாக இருக்க வேண்டும் என்ற உணர்வு!

நீச்சல்


நான்கு நாள் இடைவேளைக்கு பின் வலைப்பதிவினை எழுதுகிறேன். அப்படி என்ன பெரிதாக கழற்றினேன் என்று கேள்வி எழுகிறதா? ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை தான்.

சிறு வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது நேரமும் சூழலும் இருப்பதால் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நீச்சல் முடித்து விட்டு உணவகம் ஒன்றிற்கு சென்று இருந்தேன். சாப்பிட்ட சாப்பாட்டில் ருசி தெரியவில்லை. காதில் தண்ணீர் புகுந்து இருந்தது. நண்பர்களிடம் வினாவிய போது, அவர்களுக்கும் தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன், காதில் தண்ணீர் புகுந்தால் நாவினால் ருசி பார்க்க முடியாதா என்ன ?

Wednesday, January 16, 2008

சுருக்கல் - 'ஆப்பிள் லோகோ'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

ஆப்பிள் லோகோ (logo)..

தூரத்தில் இருந்து பார்த்தேன்
அவள் இதழ் அருகே பழமாகவும் நீ
அவள் மடியில் கணினியாகவும் நீ
ஆத்திரத்தில் உன்னை கடித்தேன்
உன் நிறுவனத்தின் நினைவுச் சின்னம் ஆனாய்!

Recession


Let's stop arguing whether 2008 will suffer from a recession or not. Its time to realize we already are in a recession.

As the DOW keeps tumbling day after day, as a retail investor I fear from investing in the markets anymore. As layoffs are on the rise, unemployment in the US is climbing. The holiday season is over and one cannot hope the retail sector to post increased sales in the months to come. Housing is in the deepest of all troubles. Keep a constant watch on your wallet!

சுருக்கல் - 'கடிகார அலறல்'



எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

கடிகார அலறல்..

என் படுக்கை அறை கடிகாரமே!
காணாததைக் கண்டது போல்
தினமும் ஒரு முறையாவது அலறுகிறாய்
உனக்கொரு செய்தி..
நான் இன்னும் பிரமச்சாரி தான்!

பொங்கல் படங்கள் - ரேங்கிங்



பொங்கலன்று 6 படங்கள் திரைக்கு வந்துள்ளன. நான் படித்த விமர்சனங்கள் படி எனது தரப் பட்டியல் இதோ.

இடம்1: பிரிவோம் சந்திப்போம்
இடம்2: பழனி
இடம்3: காளை
இடம்4: பீமா
இடம்5: வாழ்த்துகள்
இடம்6: பிடிச்சிருக்கு

Tuesday, January 15, 2008

சுருக்கல் - 'நிலவின் ஏக்கம்'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

நிலவின் ஏக்கம்..

உன்னைத் தவிர எட்டு அழகிகள்
அவனையே சுற்றி வருவது தெரிந்தும்
உன்னையே சுற்றி சுற்றி வரும் என்னை
நீ பொருட்டாக மதிப்பதில்லையே!
ஏன் ?
நான் கடனாளி என்பதாலா ?

ராஜேஷுக்கு உதவி!


எனது நெருங்கிய குடும்ப நண்பரின் தோழர் ராஜேஷ்; லுகிமியா (இரத்த புற்று நோய்) நோயினால் பாதிப்படைந்து வாழ்வுடன் போராடிக்கொண்டிருகிறார். இப்பதிவின் மூலம் உங்களிடம் உதவி கோருகிறேன். மேலும் விவரங்களுக்கு http://www.helprajesh.com/ எனும் வலைப்பக்கத்தை நாடுங்கள்.

என் நண்பரின் பதிவு இதோ http://blog.richmondtamilsangam.org/2007/12/blog-post_16.html

தூக்கிட்டாங்கப்பா தடையை!


சுப்ரீம் கோர்ட் ஜல்லிகட்டிற்கு தடை விதித்தது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஒரு வழியாக இப்போது தடையை நீக்கி உள்ளனர். அரங்கானல்லூர் கிராம மக்கள் அனைவரின் உண்ணாவிரதப்போராட்டமும், ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் பதிவு அட்டையினை திருப்பிக்கொடுத்துவிடுவோம் என்ற மிரட்டல்களும் வொர்க் அவுட் ஆகியுள்ளன. நான் கோரியது போல் திருமாவளவனும் குரல் கொடுத்து இருந்தார்.

அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடக்கப்போகும் இவ்வருட ஜல்லிக்கட்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

Monday, January 14, 2008

சுருக்கல்கள்..


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

முதல் சுருக்கல் இதோ!

மழை..

நெருக்கத்தின் சூடு தாங்காமல்
மேகங்கள் வேர்த்தன!
மெரினாவின் மணற்பரப்பில்
காதலர் கால்கள் புகலிடம் தேடி ஓடின!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


அனைத்து நண்பர் மற்றும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள். சென்ற பொங்கலன்று 500 மைல் பயணம் செய்து போக்கிரி படம் பார்த்த நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கும் வேலையில் அடுத்த பொங்கல் வந்துவிட்டது. சும்மா ஜெட் வேகத்துல காலம் பறக்குது மாமே!

பிரிட்னி


ஆங்கில பாப் உலகில் பிரசித்தி பெற்ற பெண்மணி பிரிட்னி சிபியர்ஸ். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகியுள்ளது. இவரின் முதல் திருமணம் வெறும் 55 மணி நேரமே நீடித்திருந்தது. இப்போது பாகிஸ்தானியர் ஒருவரை காதலிக்கிறார். 'காலீப்' என்பவரை மணக்க விரும்புவதாக செய்தி. இதற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாறி பாகிஸ்தானுக்கு குடி போகவும் தயாராக உள்ளாராம். இதனால் அமெரிக்க பெண்களின் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் இவர்.

கிரிக்கெட் வீரர் இம்ரான் கானை மணந்த லண்டன் அழகி ஜெமீமா கான் விவாகரத்து பெற்று லண்டன் திரும்பியது நாம் அறிந்ததே. இப்போது இந்த கதை எப்படி போகின்றது என்று பார்போம்.

Sunday, January 13, 2008

ஆசை


நான் இந்தியா சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இப்போது வீடு திரும்ப ரொம்ப ஆசை. சென்ற முறை வீடு சென்ற போது இரண்டு மாதம் ஆன உடனே மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்ற ஆசை. ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனால் வீட்டு ஆசை வர இரண்டு ஆண்டுகள் தேவை பட்டதென்றால், வெளிநாட்டு மோகம் வர ஒரு மாதமே ஆனது. ஆனால் இம்முறை சென்றால் அப்படி ஆகாதென்றே நினைக்கிறேன்.

நான் இந்தியாவில் இல்லாத சமயம் குடும்பத்தில் பல காரியங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சுப காரியங்களும் உண்டு சவ காரியங்களும் உண்டு. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் என் தந்தைக்கு இருதய சிகிச்சை நடந்த போது என்னால் அங்கு போக முடியாமல் போனது. சிகிச்சைக்கு பின்னர் நான் இன்னும் வீடு செல்லவில்லை. எனவே ஒரு குற்ற உணர்வு என்னுள் இன்றும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னுடைய இளைய சகோதரன் அப்போது உறுதுணையாக இருந்ததால் சிகிச்சை சிரமமின்றி முடிந்தது.

எனது சகோதரனை பற்றியும் சொல்லியாக வேண்டும். அவ்வப்போது சூர்யா அல்லது கார்த்தியின் நேர்காணல் தொலைகாட்சியில் வந்தால், சூர்யா தனது தம்பியை பற்றி மிக உயர்வாக பேசுவார். அவர்கள் இருவரும் பிரிந்து இருந்த காலங்கள் பற்றியும் அப்போது அவர்கள் பரிந்து கொண்ட கனிவான கடிதங்கள், உரையாடல்கள் பற்றியும் இருவருமே சுவராஸ்யமாக பேசுவார்கள். அது போன்றதொன்றுதான் எங்கள் உறவும். சகோதரர்களின் இடையே உள்ள உறவை பற்றி விளக்க ஒரு நல்ல வார்த்தை ஒன்று கண்டுபிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ரொம்பவும் உணர்ச்சிவசபட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன் ('விட்ரா விட்ரா சூனா பானா' என்கிறீர்களா என்ன ?). என் சொந்தக்கதை இருந்துவிட்டுப்போகட்டும் அடுத்த பதிவில் ஒரு ஜாலியான விஷயத்தைப்பற்றி கதைக்கிறேன்.

Friday, January 11, 2008

இது என்ன நியாயம்?


இன்று வந்த செய்திபடி தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. காலம் காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்து வருகிறது ஜல்லிக்கட்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளிக்கூடத்தில் படித்த பாடத்தில் கூட இவ்விளையாட்டு நமது பாரம்பரியம் என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்றோ இதற்கு இந்த நிலை.

சென்ற மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க 41 ஒட்டகங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன. குர்பானி கொடுக்க தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்த போது தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

'தமிழ்', 'தமிழன்' என்று கூக்குரலிடும் பா.ம.க.வினரும், விடுதலை புலிகளும் இதற்கு மட்டும் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடும் இவர்கள் இப்போது முதுகை சொரிந்து கொண்டிருப்பது ஏன்?

இதற்காக இன்றைய தீர்ப்பை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. அடுத்த முறை குர்பானி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நம் மக்கள் வழக்கு தொடர வேண்டும்.

Game on


The fight for the espresso/coffee market has now become intense. As Starbucks struggles under stormy conditions, McDonald's has decided to expand its service offering at each of its restaurants to serve cappuccinos, lattes and other drinks. All these days, Starbucks had more or less established a monopoly market, but now they have stiff competition from an equivalently strong opponent. Last year alone the shares of Starbucks lost 48%. At the same time share of McDonald's have increased by 33%.

BTW, did you know that McDonald's serve Burrito's for breakfast ? Chipotle's and TacoBell, please wake up!

Thursday, January 10, 2008

பாண்டியன் மரணம்


மண்வாசனை படத்தில் இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகம் ஆகியவர் பாண்டியன். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் நேற்று மஞ்சள் காமாளை நோயால் மதுரையில் காலமானார். சில மாதங்களுக்கு முன் பணம் வாங்கி மோசடி செய்ததாக இவரை போலீஸ் கைது செய்து பின்பு விடிவித்தது. ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவின் பிரமூகரான இவர் அக்கட்சியின் பல பொதுகூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். 48 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 8, 2008

How cool can Bill Gates get ..

Watch this video to see how cool Bill Gates can get. Bill is planning to move full time into Microsoft foundation. He will still however remain as the Chairman of Microsoft.

Barack Obama


'Barack Obama' - This is the name reverberating in the air across the United States. His resounding victory in the primary Presidential elections at Iowa for the Democrats has brought him so much attention that people have already sensed a feel of their next President. While Senator Hillary Clinton seems to be loosing the steam, scores of her supporters in the rest of the States are now shifting their sides to elect Obama to represent them at the November elections. Hardened political pros compare Obama's Iowa victory speech to legendary addresses given by the Kennedys, the Rev. Martin Luther King Jr. and President Ronald Reagan.

Born to a Kenyan father and an American mother, if elected as president he will be the first African-American President of the United States.

Monday, January 7, 2008

போங்கு ஆட்டம்!


அண்மை காலமாக சிறப்பான ஆட்டம் ஆடி வருகிறார் நமது வங்கப்புலி கங்குலி. சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக ஆடி வந்த போது, போங்கு அடித்து இவரை அவுட் ஆக்கிவிட்டனர் ஆஸி வீரர்கள். கிளார்க் அப்பீல் செய்த போது, கங்குலி விக்கெட்டை விட்டு நகராமல் நின்றார். முதல் இன்னிங்ஸில் சைமண்ட்ஸ் பாணியை பின்பற்றுகிறாரோ என்று எண்ணினேன். ஆனால் பின்பு தான் அவர் அவுட் இல்லை என்று உணர்ந்தேன். என்ன கொடுமை பென்சன் இது ? மூன்றாவது அம்பயரிடம் அவுட் கேட்காமல், பாண்டிங்கிடம் அவுட் கேட்டால் அது நியாயமா ?

மொத்தத்தில், இந்திய அணி தோல்வியை தவிர்த்திருக்கலாம். இப்போது சின்னப்புள்ளதனமாக அழுதுகொண்டு குறை சொல்லிகொண்டிருக்கிறார்கள்.

Sunday, January 6, 2008

A cheap and best laptop ?


While we still wait on the $100 laptop, Taiwan's Asustek better known as ASUS has rolled out its laptop 'ASUS Eee PC' for $299. This carries excellent reviews already (read the reviews here) and the company hopes to sell half a million units by March this year. The Eee PC runs Linux (Xandros running KDE) and uses an appealing and innovative tabbed based user interface developed by Asustek. The device comes with OpenOffice, a Microsoft Office replacement, and Firefox. It is powered by an Intel processor, the 900 MHz Intel Celeron-M. Rumors are circulating that a new Intel Merom-based ASUS Eee PC may ship as early as April which will run so efficiently that it won't need a fan. The entire laptop will be solid state with no moving parts.

So 2008 introduces a super cheap, flexible, powerful mobile computer.

Thursday, January 3, 2008

பில்லா


பில்லா படம் பார்த்தேன். அப்படத்தைப் பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தோன்றியது. இனி பில்லா என்றால் ரஜினி ஞாபகத்திற்கு வரமாட்டார். அஜித்தான் உடனே நம் கண் முன் வருவார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவனவன் ஆறடி ஏழடி என்று தாண்டும் போது ஒருவன் திடீரென்று இருபது அடி தாண்டினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு உணர்வு தான் ஏற்பட்டது.

ஆங்கில படத்தரத்திற்கு இணையாக கதையின் ஓட்டத்தை சிதற விடாமல் ஒரு தெள்ளிய நீரோடையை போல் படம் படு சுத்தம். ஒலி/ஒளி பிரமாதம். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு யுவனை தேர்ந்தெடுத்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நயன் தாரா நீச்சல் உடையில் வரும் காட்சிக்கே கொடுத்த காசிற்கான பலன் கிடைத்து விடும். நடனத்தில் மட்டும் அஜித் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பரவாயில்லை, சாப்பிடும் போது சட்னியில் இருந்து கருவேப்பிளையை எடுத்து வைப்பது போல் ரசிக்க வேண்டியதுதான். படம் படு தூள்!!

Become a secret Agent..


The forbes list of top road trip gadgets includes a new 'eye' catching gadget this year. It is a sunglass that can take pictures and videos. You can be a 007 agent or capture a passing cute girl. It is created by a Hong Kong company, 'Deke'. It has a hidden camera with a 92-degree field of vision built into the bridge frame of the shades and connected by a small wire to an MP4 in your shirt or jacket pocket. The price is $365.

வந்துட்டான்யா வந்துட்டான்யா!


தமிழ் திரையுலகம் கொடுத்த சிரிப்பு 'வெடி'முத்து, வடிவேலு. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இவர் நகைச்சுவையை விரும்புவர். வெண்ணிறாடை மூர்த்தி பாணியில் சொன்னால், படத்துல இவர பார்த்த உடனே குபீர்ன்னு சிரிப்பு பீய்ச்சிக்கிட்டு வரும்.
இவரின் வெற்றிக்கு காரணம் இவரது மதுரை தமிழும், மக்களை கவரும் வசனங்களும் தான். தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், மக்கள் தங்களது தினசரி வாழ்கையில் இவரது வசனங்களை உபயோகப்படுத்தாமல் இருக்க மாட்டர். உதாரணத்துக்கு 'கிளம்பிடான்யா கிளம்பிடான்யா', 'இப்பவே கண்ண கட்டுதே', 'ரொம்ப நல்லவன்னு சொல்லிடான்மா', 'என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே', 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்டு வீக்கு' போன்ற வசனங்கள் மி்கவும் பிரபலம்.

வரும் பொங்கலன்று இவர் கதாநாயகனாக நடித்த 'இந்திர லோகத்தில் ந அழகப்பன்' படம் வெளியாகின்றது. இப்படம் வெற்றி பெற நமது வாழ்த்துகள்!

Tuesday, January 1, 2008

First Night Pittsburgh


For new year's eve had been to Pittsburgh downtown to watch the celebrations. Left home at 7 and came back at 2. All 7 hrs were full of fun and excitement. The cultural district of Pittsburgh organizes several programs during that night and to top it all they have a 'Ball Raise' event with a fireworks show at the end. This is something similar to the 'Ball Drop' event which happens every year at Times Square. For those who are interested on the details of programs/events which were organized, please visit firstnightpgh.com.

Whenever I enquired my friends who had been to Times Square for New Year's eve, they gave me positive reviews but always ended with a big 'Sigh'. I believe the reason is because of the long wait time there. People start gathering starting from 5pm in the evening. Remember that this period of time is winter and you have to wait in bitter cold for something you are going to watch at a distance. Moreover you do not have that many events happening closer to Times Square that night and if at all you want to attend one, the prices are too high and they are not so close to Times Square. So why not the next time try visiting Pittsburgh for the New Year's eve. I bet you would like it and keep coming again every year.