Thursday, January 31, 2008

'அட' போட வைக்கும் தீர்மானம்!


பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இறங்கியவுடன் நம்ம ஊரு மாதிரி வருமா என்று பலர் எச்சில் வரா விட்டாலும், ரோட்டில் எச்சில் வரும் வரை காரி துப்புவர் என்று. நம்ம ஊருடா என்று இனி யாரும் அவ்வளவு எளிதாக நினைத்து சென்னையின் பொது இடங்களில் எச்சில் துப்பவோ, குப்பை போடவோ முடியாது. எச்சில் துப்பினால் ரூ 50 ம் , குப்பை கொட்டினால் ரூ 100 ம் அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் சட்டம் போல் அல்லாமல் நிரந்தரமாக இச்சட்டம் வந்தால் பெயரளவில் இருக்கும் சிங்காரச் சென்னை நிசமாகவே சிங்காரமாக வாய்ப்பு உள்ளது. யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, போலீசாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விஷயம் இது.

1 comment:

Unknown said...

Maybe law will help in some places during the day but not all the time. Certainly people should stop littering, peeing in public places.