Thursday, January 24, 2008

சண்டை போடுங்கள்


உங்கள் கணவனோ மனைவியோ உங்களை தாக்கிப் பேசும் போது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் ஆயுள் காலம் கம்மி என்று சொல்கிறது வாஷிங்டன்னிலிருந்து வரும் ஒரு மனோதத்துவ ஆய்வுக் குறிப்பு. ஆகையால், இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை எழும் என்று பழைய பஞ்சாங்கம் பாடாமல், எதிர் பேச்சு பேசி சண்டை போடுங்கள்.

ஆனால் சண்டைக்கு பின்னர் சமாதானம் ஆகுங்குள். எப்படி சமாதானம் ஆவது என்று தோன்றுகிறதா ? சிறு வயதில் உங்கள் தாய் அல்லது தந்தையிடம் அடி/ திட்டு வாங்கிய பின், அவர்கள் உங்களிடம் ஆசையாக பேசி செல்லம் காட்டியது ஞாபகம் இருக்கிறதா ? அதே வழியை பின்பற்றுங்கள்.

1 comment:

Trillionaire said...

MC - yedho anubhava pattu ezhudhina maadhiri illae irukku? :)