Sunday, January 20, 2008

நீச்சல்


நான்கு நாள் இடைவேளைக்கு பின் வலைப்பதிவினை எழுதுகிறேன். அப்படி என்ன பெரிதாக கழற்றினேன் என்று கேள்வி எழுகிறதா? ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை தான்.

சிறு வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. இப்போது நேரமும் சூழலும் இருப்பதால் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நீச்சல் முடித்து விட்டு உணவகம் ஒன்றிற்கு சென்று இருந்தேன். சாப்பிட்ட சாப்பாட்டில் ருசி தெரியவில்லை. காதில் தண்ணீர் புகுந்து இருந்தது. நண்பர்களிடம் வினாவிய போது, அவர்களுக்கும் தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன், காதில் தண்ணீர் புகுந்தால் நாவினால் ருசி பார்க்க முடியாதா என்ன ?

2 comments:

... said...

Andha hotelan unvil rusiya illa. adhan unmai.:-)

Unknown said...

vayila thanni neraya poirukkumo?