Friday, January 11, 2008

இது என்ன நியாயம்?


இன்று வந்த செய்திபடி தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. காலம் காலமாக தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்து வருகிறது ஜல்லிக்கட்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளிக்கூடத்தில் படித்த பாடத்தில் கூட இவ்விளையாட்டு நமது பாரம்பரியம் என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்றோ இதற்கு இந்த நிலை.

சென்ற மாதம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க 41 ஒட்டகங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன. குர்பானி கொடுக்க தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்த போது தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஒட்டகங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

'தமிழ்', 'தமிழன்' என்று கூக்குரலிடும் பா.ம.க.வினரும், விடுதலை புலிகளும் இதற்கு மட்டும் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடும் இவர்கள் இப்போது முதுகை சொரிந்து கொண்டிருப்பது ஏன்?

இதற்காக இன்றைய தீர்ப்பை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. அடுத்த முறை குர்பானி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நம் மக்கள் வழக்கு தொடர வேண்டும்.

No comments: