
நண்பன் சாய் மகேஷுடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்தேன். என்னை ஹைக்கூ கவிதைகள் எழுதச் சொன்னான். நான் இது வரை ஹைக்கூ படித்தது இல்லை. ஆகையால் ஒன்றை பரிமாறச் சொன்னேன். ந.முத்துகுமாரின் ஹைக்கூ ஒன்றை எடுத்து விட்டான் அவன்.
நள்ளிரவில் அண்ணா சாலை!
நியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை..
பஞ்சரான வண்டியுடன் நான்!
இதை படித்த உடன் எனக்கு ஒரு எதிர்மறை ஹைக்கூ (என் பாணியில் சுருக்கல்) ஒன்று தோன்ற, அதை அவனிடம் சொன்னேன். மிகவும் ரசித்தான். அந்தச் சுருக்கல் கீழே!
அதே நள்ளிரவில் அண்ணா சாலை!
தனியாக பிளாட்பார்மில் படுத்து இருந்தவனுக்கு
அன்று மட்டும் காவல் காக்க ஆள் கிடைத்தது..
பஞ்சரான வண்டியுடன் ஒரு ஏமாளி!
No comments:
Post a Comment