Sunday, March 23, 2008

ரகுவரன்..


வேலை பளு காரணத்தால் எழுத முடியவில்லை..ஒரு வாரம் போல் ஆகிவிட்டது..அதற்குள் ஒரு துயர சம்பவம் நிகழந்துவிட்டது. தமிழ் சினிமாவில் குரலாலும், உடல் வாகுவாலும் மட்டுமே வில்லன்கள் ஜொலித்த நிலையில், வில்லத்தனதுக்கே ஒரு புது இலக்கணத்தை வகுத்தவர் ரகுவரன். இவரின் மரணச் செய்தியை கேட்ட போது முகத்தில் சடாரென்று யாரோ அடித்தது போல் இருந்தது.

எழுத்துலகம் சுஜாதாவை இழக்க, அடுத்த சில நாட்களில் திரையுலகம் இன்னொரு இழப்பை சந்தித்திருக்கிறது. இவரை பிரிந்து வாடும் சுற்றத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: