Sunday, December 30, 2007

ஜிவ்வு!


நேற்று கார்நேகி அறிவியல் மையத்திற்கு சென்று இருந்தேன். அங்கு மனித உடம்பு அருங்காட்சியகம் ஒன்றை வைத்திருந்தனர். இறந்த மனிதர்களின் உடலை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து வைத்து இருந்தனர். உடல் தசை, மூளை, இருதயம், நுரையீரல், செரிமான உறுப்பு, ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்பு, 2/4/8/16/32 வார சிசு வளர்ச்சி என்று பலவற்றினை பார்வைக்கு வைத்து இருந்தனர். காட்சியத்தை முக்கால் மணி நேரத்தில் பார்த்து முடித்து விடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் பார்க்க பார்க்க மிரட்சி அடைந்து புல்லரித்து போனேன். வெளியே வரும் போது இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது.

ம்ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன். மனித மூளையையும், நுரையீரலையும் என் கையில் தந்தார்கள்...ஜிவ்வென்று இருந்தது!

No comments: